TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சபையின் தொலைதூரப் பெருங்கடல் பரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தம்

March 13 , 2023 496 days 251 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் நாடுகள், கடல் பரப்பின் மூன்றில் இரண்டு பங்கை உள்ளடக்கிய சர்வதேசக் கடல் பரப்பில் உள்ள பல்லுயிர்த் தன்மையினைப் பாதுகாப்பதற்கான ஒரு சர்வதேச ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்டுள்ளன.
  • மேலும் இது பெருங்கடல் மீதான பாரீஸ் ஒப்பந்தம் எனவும் அழைக்கப் படுகின்றது.
  • 1982 ஆம் ஆண்டில், கடல்சார் சட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை அல்லது UNCLOS ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • இந்த உடன்படிக்கையானது பெருங்கடல்கள் மற்றும் அதன் வளங்களைப் பயன்படுத்துவதற்கான விதிகளை வரையறுத்தது.
  • ஆனால் எந்த நாடுகளின் கட்டுப்பாட்டிற்குள்ளும் அடங்காத பகுதிகளுக்கான ஒரு விரிவானச் சட்ட முறைமை எதுவும் உருவாக்கப்படவில்லை.
  • 1958 ஆம் ஆண்டு ஜெனீவா தொலைதூரப் பெருங்கடல்பரப்பு உடன்படிக்கையின் படி, ஒரு நாட்டின் பிராந்திய நீர்ப் பரப்பு அல்லது உள்நாட்டு நீர் வளத்தில் சேர்க்கப்படாத கடல் பகுதிகள் தொலைதூரப் பெருங்கடல்பரப்பு என்று அழைக்கப் படுகின்றன.
  • இது கடற்கரையிலிருந்து 200 கடல் மைல்கள் (370 கிமீ) வரை நீண்டு காணப்படுகின்ற, ஒரு நாட்டின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்திற்கு அப்பால் அமைந்துள்ள பகுதியாகும்.
  • தொலைதூரப் பெருங்கடல் பரப்புகளில் உள்ள வளங்களின் மேலாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு எந்த நாடும் பொறுப்பேற்காது.
  • தொலைதூரப் பெருங்கடல்பரப்புகள் உலகின் கடல் பரப்பில் 60%க்கும் அதிகமான பரப்பினை உள்ளடக்கியதோடு, அவை பூமியின் மேற்பரப்பில் பாதியளவினை உள் அடக்கியதாகும்.
  • உயிரியல் பன்முகத் தன்மைக்கான உடன்படிக்கை மீதான (COP15) பங்குதாரர்கள் மாநாட்டில், 2030 ஆம் ஆண்டிற்குள் 30% கடல் பரப்புகளைப் பாதுகாப்பதற்கு உறுப்பினர் நாடுகள் ஒப்புக் கொண்டன.
  • இது வரலாற்றுச் சிறப்புமிக்க குன்மிங்-மாண்ட்ரியல் உலகப் பல்லுயிர்க் கட்டமைப்பு அமைப்பினால் கொண்டு வரப்பட்ட (GBF) '30 x 30 உறுதிமொழியின்' ஒரு பகுதி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்