TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சபையின் நாகோர்னோ-காராபாக் திட்டம்

October 6 , 2023 288 days 205 0
  • அஜர்பைஜானில் உள்ள நாகோர்னோ- காராபாக் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் குழு வந்தடைந்துள்ளது.
  • அஜர்பைஜான், பிரிந்த பகுதியினை மீண்டும் கைப்பற்றியதைத் தொடர்ந்து கிட்டத் தட்ட ஒட்டுமொத்த ஆர்மேனிய இன மக்களும் அந்நாட்டிலிருந்துப் புலம் பெயர்ந்தனர்.
  • சுமார் 30 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு சர்வதேச அமைப்பு இப்பகுதிக்கு அதன் அணுகலைப் பெற்றுள்ளது.
  • முப்பது ஆண்டுகளாக இந்தப் பகுதியை தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆர்மேனிய பிரிவினைவாதிகள், ஆயுதங்களை ஒப்படைத்து, தங்கள் அரசாங்கத்தைக் கலைத்து, அஜர்பைஜானுடன் மீண்டும் இணைவதற்கு ஒப்புக் கொண்டனர்.
  • இந்த பிரிவினைவாத ஆர்மேனியர்கள் சர்வதேச அளவில் அஜர்பைஜான் பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள காராபாக்கின் ஒரு பகுதியை தங்கள் மூதாதையர் தாயகமாக உரிமை கோருகின்றனர்.
  • 2.8 மில்லியன் மக்கள் வாழும் ஆர்மேனியா, அகதிகளின் திடீர் வருகையால் பெரும் சவாலை எதிர்கொள்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்