TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சபையின் நீர் உடன்படிக்கை 2024

July 23 , 2024 42 days 191 0
  • ஐவரி கோஸ்ட் நாடானது, ஐக்கிய நாடுகள் சபையின் நீர் உடன்படிக்கையில் தற்போது இணைந்ததையடுத்து, இந்த உடன்படிக்கையில் பங்கு பெற்ற 10வது ஆப்பிரிக்க நாடாக மாறியுள்ளது.
  • இது தற்போது 1992 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் நீர் உடன்படிக்கையின் 53வது பங்குதாரர் நாடாகும்.
  • இந்த உடன்படிக்கை ஆனது, பன்னாட்டு நீர்வழிகள் மற்றும் சர்வதேச ஏரிகளின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு பற்றிய உடன்படிக்கை என்றும் அழைக்கப்படுகிறது.
  • இந்த உடன்படிக்கையானது, ஆரம்பத்தில் ஐரோப்பியப் பிராந்தியம் முழுவதிற்குமான ஒரு பிராந்தியக் கட்டமைப்பாக நிறுவப்பட்டது.
  • 2016 ஆம் ஆண்டில் இது ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து உறுப்பினர் நாடுகளும் பங்கு பெற அனுமதிக்கப்பட்டது, ஆனாலும் இந்தியா இந்த உடன்படிக்கையில் ஒரு பங்குதாரராக இடம் பெறவில்லை.
  • இந்த உடன்படிக்கையானது பகிரப்பட்ட நீர் ஆதாரங்களின் நிலையான மேலாண்மை, நிலையான மேம்பாட்டு இலக்குகளைச் செயல்படுத்துதல், மோதல்களைத் தடுத்தல் மற்றும் அமைதி மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஒரு தனித்துவமான சட்டப் பிணைப்பு செயற்கருவியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்