TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் சபை

April 2 , 2019 1936 days 618 0
  • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் சபையின் (UNEA - UN Environment Assembly) நான்காவது சந்திப்பானது கென்யாவின் நைரோபியில் நடைபெற்றது.
  • UNEA-ன் கருத்துருவானது, “சுற்றுச்சூழல் சவால்கள், நீடித்த நுகர்வு மற்றும் உற்பத்தி ஆகியவற்றிற்கான புத்தாக்கத் தீர்வுகள்” என்பதாகும்.
  • UNEA 4-ன் தலைமை நாடாக எஸ்தோனியா உள்ளது.
  • UNEA என்பது சுற்றுச் சூழல் குறித்து உலகின் உயர்மட்ட நிலையில் முடிவு எடுக்கும் ஒரு அமைப்பாகும்.
  • இது தற்பொழுது உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் மிக அபாயகரமான சுற்றுச் சூழல் சவால்களைக் களைகிறது.
  • UNEA ஆனது 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உருவாக்கப்பட்டது.
  • இந்தக் கருத்தரங்கானது பொதுவாக ரியோ + 20 என்றறியப்படுகின்றது.
  • முதலாவது மற்றும் இரண்டாவது அமர்வுகளானது சட்ட விரோத வனவிலங்கு வர்த்தகம், காற்றின் தரம், சுற்றுச்சூழல் சட்ட விதிமுறை, பசுமைப் பொருளாதாரத்திற்கு நிதியளித்தல் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் ஆகியவற்றின் மிக முக்கியமான சவால்கள் குறித்த தீர்மானங்களை எடுத்து, அதை ஏற்றுக் கொண்டது.
  • UNEA-ன் மூன்றாவது அமர்வானது “மாசுபாடற்ற கிரகத்தை நோக்கி” என்ற கருத்துருவுடன் நைரோபியில் நடைபெற்றது.
  • UNEA ஆனது 193 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்