TNPSC Thervupettagam

ஐநா பான் உச்சி மாநாடு 2023

October 24 , 2023 270 days 181 0
  • ஜெர்மனியின் பான் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் (UN) உச்சி மாநாடு ஆனது இரசாயனங்கள் மற்றும் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் அபாயங்களைக் குறைப்பதற்கான ஒரு புதிய உலகளாவிய கட்டமைப்பை ஏற்றுள்ளது.
  • ஐந்தாவது சர்வதேச இரசாயன மேலாண்மை மாநாட்டில் மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடிய இரசாயனங்களைப் படிப்படியாக அகற்றுவதற்கு உலக நாடுகள் உறுதி பூண்டு உள்ளன.
  • இரசாயனங்கள் மீதான உலகளாவிய கட்டமைப்பு ஆனது, இரசாயனங்களின் ஆயுள் சுழற்சி முழுவத்திற்குமான உறுதியான இலக்குகள் மற்றும் வழிகாட்டுதல்களை அமைக்கிறது.
  • இந்த கட்டமைப்பானது ரசாயனங்கள் மற்றும் கழிவுகளின் மீது மிகவும் பொறுப்பான மேலாண்மையினை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள 28 இலக்குகளை அடிப்படையாகக் கொண்டது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் இரசாயன மாசுபாட்டைக் குறைப்பதற்கும் பாதுகாப்பான மாற்று வழிகளை ஊக்குவிப்பதற்குமான கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை வகுக்க உள்ளதாக உலக நாடுகளின் அரசாங்கங்கள் உறுதிபூண்டுள்ளன.
  • தொழிற்சாலைகளும், மாசு மற்றும் அதன் பாதகமான தாக்கங்களைக் குறைக்கச் செய்வதற்காக இரசாயனங்களை மேலாண்மை செய்வதற்கு உறுதியளித்தன.
  • 2035 ஆம் ஆண்டிற்குள் தீங்கு விளைவிக்கும் வகையிலான வேளாண் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டினை படிப்படியாக ஒழிப்பதே இந்தக் கட்டமைப்பின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்