மத்திய அரசானது, ERSS-112 (அவசர நடவடிக்கை உதவி வழங்கீட்டு அமைப்பு) உடன் மகளிர் உதவி எண், குழந்தைகளுக்கான உதவி எண் ஆகியவற்றினை ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளது.
2015 ஆம் ஆண்டு சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் 2(25)வது பிரிவின் கீழ் குழந்தைகளுக்கான உதவி எண் சேவைகள் வரையறுக்கப் பட்டு உள்ளன.
இது நெருக்கடி நிலையில் உள்ள குழந்தைகளை அவசர கால அல்லது நீண்ட காலப் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு சேவையுடன் இணைக்கின்ற 24 மணி நேர அவசர காலச் சேவையாகும்.
நெருக்கடியில் உள்ள எந்தவொரு குழந்தையும் அல்லது அவர்கள் சார்பாக எந்தவொரு வயது வந்த நபரும் நான்கு இலக்க இலவச எண்ணை (1098) அழைப்பதன் மூலம் இந்தச் சேவையை அணுகலாம்.
கேரளாவில் உள்ள மேம்படுத்தப்பட்ட கணினி முறைக்கான மையம் (C-DAC) ஆனது, 1098 என்ற குழந்தைகளுக்கான ஒரு உதவி எண்ணின் தன்னியக்கம் மற்றும் ERSS-112 உடன் அதனை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றிற்கான ஒரு மொத்தத் தொழில்நுட்பத் தீர்வு வழங்குனராக (TSP) உள்ளது.