TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த ஈரநில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு 2025 – தமிழ்நாடு

March 12 , 2025 19 days 92 0
  • 2025 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ஈரநில வாழ் பறவைகள் கணக்கெடுப்பின் போது பல்வேறு ஈரநில வாழ் பறவை இனங்கள் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டன.
  • திருச்சி மாவட்டத்தில் நடத்தப்பட்ட இந்தக் கணக்கெடுப்பு 20 ஈரநிலப் பகுதிகளை உள்ளடக்கியதாகும்.
  • வலசை போகும் பறவைகளைக் கண்காணித்தல், ஏரிகள், குளங்கள் மற்றும் இதர பிற நீர்நிலைகளில் பறவை வாழ்விடங்களை மதிப்பிடுதல் மற்றும் ஈரநிலப் பறவைகளின் பயனுள்ள மேலாண்மை மற்றும் வளங்காப்பினை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்தக் கணக்கெடுப்பானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • புதுக்கோட்டை மாவட்டத்தில், கவிநாடு குளம், ஆரியூர் குளம், அன்னவாசல் 'பெரிய குளம்' மற்றும் சிறுங்காகுளம் உள்ளிட்ட 25 ஈரநிலங்களில் இந்தக் கணக்கெடுப்பு மேற் கொள்ளப் பட்டது.
  • அரியலூர் மாவட்டத்தில் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை உள்ளடக்கிய 10 சதுப்பு நிலங்களில் இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
  • பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 20 சதுப்பு நிலங்களில் இந்தக் கணக்கெடுப்பு மேற் கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்