TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை

March 7 , 2019 1962 days 869 0
  • மார்ச் 06 அன்று தமிழ்நாடு அரசு தனது ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கையை அறிவித்துள்ளது.
  • இது தென் மாவட்டங்களில் ஜவுளித் தொழிற்சாலையின் நீடித்த வளர்ச்சி, தொழில்நுட்ப ஜவுளியை ஊக்குவித்தல் மற்றும் ஜவுளித் தொழிற்சாலையை ஊக்குவித்தல் ஆகியவற்றிற்கு உந்து சக்தியாக இருக்கும்.
  • இதற்கு முன் ஜவுளித் துறைக்கான மாநிலக் கொள்கையானது 1998 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
  • புதிய கொள்கையின்படி,
    • மாநில அரசு தொழில்நுட்ப ஜவுளித் திட்டங்களுக்கான முத்திரைத் தாள் கட்டணத்திற்கு 100 சதவிகிதம் விலக்கு அளிக்கும்.
    • மத்திய அரசிலிருந்து பெறப்படும் ஊக்கத் தொகைகளுடன் தொழில்நுட்ப ஜவுளித் திட்டங்களுக்கான 6 சதவிகித வட்டி மானியத்தை மாநில அரசு அளிக்கும்.
    • ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காங்களுக்கான திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப ஜவுளிப் பூங்காக்களை அமைப்பதற்காக திட்ட மதிப்பில் 9 சதவிகித நிதியை மாநில அரசு அளிக்கும்.

  • கைத்தறித் துறைக்கான, முதன்மை கைத்தறித் தொழிலாளர்களின் கூட்டுறவு சங்கங்களின் வட்டி மானியம் தற்பொழுது 4 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • சலுகை மானியத் திட்டத்திற்கான ஒதுக்கீடானது அதிகரிக்கப்படும்.
  • காஞ்சிபுரம், சேலம், ஆரணி மற்றும் திருபுவனம் ஆகிய நகரங்களில் பட்டுப் பூங்காக் குழுக்களை அமைப்பதற்கு மாநில அரசு முயற்சி எடுக்கும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்