அலகாபாத் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றங்கள், ஒருவரின் பெயர் அல்லது குடும்பப் பெயரை மாற்றுவதற்கான ஒரு உரிமையானது அரசியலமைப்பின் படி 21வது சட்டப் பிரிவின் கீழான வாழ்வுரிமையின் ஒரு பகுதி என்று தீர்ப்பளித்துள்ளன.
தமது பெயரை மாற்றுவதற்கு அனுமதியினை அளிக்க மறுக்கும் அதிகாரிகளின் ஒரு நடவடிக்கையானது, அரசியலமைப்பின் 19 (1)(அ), 21 மற்றும் 14 ஆகிய சட்டப் பிரிவின் கீழ் மனுதாரருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுகிறது.
முன்னதாக, “காஷிஷ் குப்தா எதிர் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்” ஆகியோருக்கு இடையிலான (2020) வழக்கில் கேரள உயர்நீதிமன்றம், “ஒரு பெயரை வைத்திருப்பதும் அப்பெயரினைத் தான் விரும்பும் விதத்தில் வெளிப்படுத்துவதும் 19 (1)(அ) மற்றும் 21 ஆகிய சட்டப்பிரிவுகளில் உள்ள உரிமைகளின் ஒரு பகுதியாகும் என்று தீர்ப்பளித்துள்ளது.