TNPSC Thervupettagam

ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டை (ரேஷன் அட்டை)

May 5 , 2020 1539 days 771 0
  • பஞ்சாப், பீகார், உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் டாமன் & டையூ ஆகியவை “ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டை” என்ற திட்டத்துடன் இணைந்துள்ளன.
  • இதற்கு மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 
  • இந்தத் திட்டத்தின் நோக்கம் மாநிலங்களுக்கிடையே குடும்ப அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளுதல் என்பதாகும்.
  • இது அனைத்துப் பயனாளிகளுக்கும் குறிப்பாக இடம்பெயரும் மக்களுக்கு உதவுவதை உறுதி செய்கின்றது.
  • இவர்கள் தங்களது சொந்தத் தேர்வின் அடிப்படையில் நாடெங்கிலும் உள்ள எந்தவொரு PDS (PDS-Public Distribution system) கடையையும் அணுக முடியும்.
  • ஏற்கெனவே 12ற்கும் மேற்பட்ட மாநிலங்கள் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளன.
  • மத்தியப் பிரதேசம், கேரளா, ஜார்க்கண்ட், ஆந்திரப் பிரதேசம், குஜராத், கோவா, ஹரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்