TNPSC Thervupettagam

ஒற்றைக் கல் மற்றும் பெருங்கற்காலப் புதைவிடங்கள்

June 15 , 2023 402 days 251 0
  • தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறையானது, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடு மணல் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஐந்து ‘மென்ஹிர்’ (ஒற்றைக் கல்) மற்றும் பெருங் கற்காலப் புதைவிடங்களைப் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக அறிவித்து ள்ளது.
  • கொடுமணல் எனுமிடமானது நொய்யலாற்றின் வடக்குக் கரையில் ஈரோட்டில் இருந்து சுமார் 42 கி.மீ. தொலைவில் உள்ளது.
  • ரோமானிய வெள்ளி நாணயங்கள், விலையுயர்ந்தக் கற்கள் மற்றும் குவார்ட்ஸ் கற்கள் ஆகியவற்றோடுச் சேர்த்து, தமிழ்-பிராமி மொழியின் எழுத்து வடிவங்களில் பொறிக்கப் பட்டப் பெயர்களைக் கொண்ட பானை ஓடுகள் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டன.
  • சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஒரு தொழிலகம் மற்றும் வர்த்தக மையம் இருந்ததை இந்தக் கண்டுபிடிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்