அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான வங்கதேசத்தைச் சேர்ந்த முஹமது யூனுஸ் டோக்கியோ ஒலிம்பிக்கில் 'ஒலிம்பிக் லாரல்' கெளரவத்தைப் பெறும் இரண்டாவது நபராவார்.
கென்ய ஒலிம்பிக் வீரரும் சமூக மாற்றத்திற்காக செயல்படும் கிப் கெய்னோ (Kip Keino) என்பவர் முதன்முறையாக 2016 ஆம் ஆண்டில் நடந்த ரியோ ஒலிம்பிக்கில் இந்த கெளரவத்தைப் பெற்றார்.
யூனுஸ் "world’s banker to the poor" (ஏழைகளுக்கான உலகத்தின் வங்கி) என்று குறிப்பிடப் படுகிறார்.
யூனுஸ் 1983 ஆம் ஆண்டில் வங்கதேசத்தில் கிராமீன் வங்கியை நிறுவினார்.
நுண் நிதியத்தின் (microfinance) ஆதரவாளராக இருந்த அவர் 2006 ஆம் ஆண்டில் அதற்காக நோபல் பரிசை வென்றார்.