ஒளரங்காபாத் மற்றும் ஓஸ்மானாபாத் பெயர் மாற்றம்
July 4 , 2022
748 days
544
- ஓஸ்மானாபாத் தாராஷிவ் என்றும், ஒளரங்காபாத் சம்பாஜி நகர் என்றும் பெயர் மாற்றப் பட்டுள்ளன.
- நவி மும்பை விமான நிலையத்தின் பெயரும் டிபி பாட்டீல் சர்வதேச விமான நிலையம் என மாற்றப்படும்.
- ஒளரங்காபாத் பகுதியானது, 1610 ஆம் ஆண்டில் அகமத்நகரின் நிஜாம்ஷாஹி வம்சத்தின் சித்தி என்ற இனத்தின் தளபதி மாலிக் ஆம்பர் என்பவரால் நிறுவப்பட்டது.
- ஔரங்காபாத் பகுதிக்கு அந்த நேரத்தில் கிர்கி அல்லது காட்கி என்று பெயரிடப்பட்டது.
- 1626 ஆம் ஆண்டில் மாலிக் ஆம்பரின் மரணித்திற்குப் பிறகு அவரின் மகன் ஃபதே கான் இதற்கு ஃபதேபூர் என பெயரிட்டார்.
- முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் 1653 ஆம் ஆண்டில் தக்காணத்தின் மீது படை எடுத்து அந்த நகரத்தில் தனது தலைநகரை அமைத்தார்.
- மேலும் அதன் பெயரை அவர் ஔரங்காபாத் என்று மாற்றினார்.
Post Views:
544