மாநிலங்களவையானது, 2023 ஆம் ஆண்டு ஒளிப்பதிவு (திருத்தம்) மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
இது கடுமையான திரைப்படக் களவு எதிர்ப்பு விதிகளை அறிமுகப்படுத்தி திரைப்பட தணிக்கை முதல் பதிப்புரிமை வரையிலான பல செயல்முறைகளை உள்ளடக்கும் வகையில் சட்டத்தின் வரம்பினை விரிவுபடுத்துகிறது.
ஒரு திரைப்படத்தினை அனுமதியின்றித் திருடுவதற்கு எந்தவொரு ஒலி-ஒளிப்பதிவு சாதனத்தைப் பயன்படுத்துபவர்களுக்கும் மூன்று ஆண்டுகள் காலம் என்ற வரையில் சிறைத் தண்டனையும், படத்தின் தயாரிப்புச் செலவில் 5% வரை அபராதமும் விதிக்க இந்த மசோதா முன்மொழிகிறது.
இந்த மசோதாவானது, 1952 ஆம் ஆண்டு ஒளிப்பதிவுச் சட்டத்தைத் திருத்தியமைக்க முயல்கிறது.
இளம் பருவத்தினருக்கு மேற்பார்வை தேவைப்படும் படங்களுக்கு மூன்று வயதுசார் மதிப்பீடுகளையும் வழங்கும் முறையை இந்த மசோதா அறிமுகப் படுத்துகிறது.
திரைப்படங்கள் தற்போது U/A மதிப்பீட்டைப் பெறுகின்றன.
இது தற்போது U/A 7+, U/A 13+ மற்றும் U/A 16+ எனப் பிரிக்கப்பட்டுள்ளன.