TNPSC Thervupettagam

ஒளியிழை கம்பிவட இறக்குமதிகள் மீதான இறக்குமதி குவிப்பு தடுப்பு வரி

August 10 , 2023 344 days 220 0
  • நிதி அமைச்சகமானது சீனா, தென் கொரியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில குறிப்பிட்ட ஒளியிழைக் கம்பிவடங்கள் மீது இறக்குமதி குவிப்பு தடுப்பு வரிகளை விதித்துள்ளது.
  • இது இவற்றின் இறக்குமதிகளால் உள்நாட்டுத் தொழில்துறையில் ஏற்படும் பல்வேறு பாதகமிக்க விளைவுகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது வர்த்தகத் தீர்வுகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (DGTR) பரிந்துரைகளின் அடிப்படையில் விதிக்கப் பட்டுள்ளது.
  • சமச்சீரான வர்த்தக நடைமுறைகளைச் செயலாக்குவதற்காக இறக்குமதி குவிப்பு எதிர்ப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப் படுகின்றன.
  • மேலும் இது உள்நாட்டுத் தொழில்துறைகளுக்கான ஒரு சமநிலையானப் போட்டிச் சூழலை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த வரிகள் விதிக்கப்படுவதன் நோக்கம் இறக்குமதியைத் தடுப்பதோ அல்லது நியாயமற்ற முறையில் உற்பத்திப் பொருட்களின் விலையை உயர்த்துவதோ அல்ல.
  • உலக வர்த்தக அமைப்பு (WTO) அமைத்த உலகளாவியக் கட்டமைப்பின்படி அரசுகள் வரிகளை விதிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்