ஓமிக்ரான் திரிபின் முள் வடிவ புரதத்தின் மூலக்கூறு அளவிலான கட்டமைப்பின் பகுப்பாய்வை உலகிலேயே முதன்முதலாக பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.
கிரையோ-எலக்ட்ரான் என்ற நுண்ணோக்கியைப் பயன்படுத்தி இந்தப் பகுப்பாய்வு செய்யப் பட்டது.
பெரிதும் மாற்றமடைந்த இந்தத் திரிபானது, மனித உயிரணுக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும், நோய் எதிர்ப்புச் சக்தியை எவ்வாறு அதிகளவில் தவிர்க்கிறது என்பதையும் இந்தப் பகுப்பாய்வு வெளிக் கொணர்ந்தது.