மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் இணைந்து பீகாரில் 14.5 கிலோமீட்டர் நீளமான ரயில் மற்றும் சாலைப் பாலத்தை (இரட்டை அடுக்குப் பாலம்) திறந்து வைத்தனர்.
பீகாரின் முங்கர் பகுதியில் NH 333B என்ற தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே பாயும் கங்கை ஆற்றின் மீது இந்தப் பாலமானது கட்டப்பட்டுள்ளது.