இந்தியாவில் ஆற்று ஓங்கில்களின் வளங்காப்பு குறித்து ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தச் செய்வதற்கும், அதனை ஊக்குவிப்பதற்கும் வேண்டி இத்தினமானது கடைபிடிக்கப் படுகிறது.
2010ஆம் ஆண்டின் இதே நாளில் தான் கங்கை ஆற்று ஓங்கில்கள் இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்காக அறிவிக்கப்பட்டது.
இவை 1972 ஆம் ஆண்டின் இந்திய வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் முதல் அட்டவணையில் சேர்க்கப் பட்டுள்ளன.
இவை IUCN அமைப்பினால் அருகி வரும் இனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பீகாரில் விக்ரமசீலா கங்கை ஆற்று ஓங்கில் சரணாலயமானது நிறுவப் பட்டுள்ளது.