தேசிய தூய்மை கங்கைத் திட்டமானது மத்திய ஜல்சக்தி அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து தேசியத் தலைநகரில் உள்ள மேஜர் தயான்சந்த் மைதானத்தில் ‘கங்கா உத்சவ்’ என்ற ஒன்றை ஏற்பாடு செய்தது.
இந்தத் தினத்தில் கங்கை நதியானது நாட்டின் தேசிய நதியாக அறிவிக்கப்பட்டதால் நவம்பர் 4 ஆம் தேதியன்று கங்கை உத்சவ் கொண்டாடப்படுகின்றது.
2008 ஆம் ஆண்டில் கங்கையானது தேசிய நதியாக அறிவிக்கப்பட்ட 11வது நினைவு தினத்தைக் குறிக்கும் வகையில் இந்த உத்சவ் கொண்டாடப்படுகின்றது.
கங்கை நதியையும் அதன் துணை நதிகளையும் சுத்தம் செய்வதற்கான முயற்சிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் பொது மக்களின் பங்களிப்பை ஏற்படுத்துவதற்காகவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.