December 6 , 2023
228 days
160
- இந்திய ரயில்வே நிர்வாகமானது, “கஜராஜ் அமைப்பை” நிறுவியதன் மூலம் வன விலங்கு வளங்காப்பில் ஒரு முன்னோடியான முயற்சியைத் தொடங்கியுள்ளது.
- இது ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தீர்வு அமைப்பு ஆகும்.
- இது தண்டவாளத்தில் யானைகள் இருப்பதைப் பற்றி இரயில் எஞ்சின் ஓட்டுநர்களுக்கு சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்கும்.
- இரயில்வே நிர்வாகமானது அசாம், மேற்கு வங்காளம், ஒடிசா, கேரளா, ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் இந்த அமைப்பை நிறுவ உள்ளது.
- ஊடுருவல் கண்டறிதல் அமைப்பு (IDS) என்பது வடகிழக்குப் பிராந்திய இரயில்வே நிர்வாகத்தினால் (NFR) 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/6-29.png)
Post Views:
160