அதிகரித்து வரும் மனித-யானை மோதல் நிகழ்வுகளுக்கு (HEC) தீர்வு காணும் விதமாக அசாம் மாநில அரசானது ‘கஜா கோதா’ (யானை கதை) என்ற புதுமையான விழிப்பு உணர்வுத் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
இது உள்ளூர்ச் சமூகங்களுக்கும் வீரமிக்க யானைகளுக்கும் இடையேயான சகவாழ்வு சூழலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது யானைகளின் நடத்தை, சூழலியல் மற்றும் பிராந்தியத்துடனான கலாச்சாரத் தொடர்பு மற்றும் அவற்றினைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றி மக்களுக்குக் கற்பிக்கிறது.