நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் கடன் பெறுதலில் பெண்களின் பங்கு 44% அதிகமாக உள்ளது.
தமிழ்நாடு (44%), ஆந்திரப் பிரதேசம் (41%), தெலுங்கானா (35%), கர்நாடகா (34%) போன்ற தென் மாநிலங்களில் குறைந்தபட்சம் ஒரு நேரடிக் கடனையாவது கொண்டுள்ள பெண்களின் பங்கு அதிகமாக உள்ளது.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி நாடு முழுவதுமான ஒட்டுமொத்த அளவு 31% ஆக இருந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு மாநிலத்தில் கடன் பெறும் பெண்களின் பங்கில் 10% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் பதிவானது.
மகாராஷ்டிராவில் கடன் பெறுதலில் பெண்களின் பங்கு 30% ஆகவும், இராஜஸ்தான் மாநிலத்தில் 26% ஆகவும், மத்தியப் பிரதேச மாநிலத்தில் 25% ஆகவும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் 23% ஆகவும் உள்ளது.
2024 ஆம் ஆண்டில், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகியவை அனைத்து CIBIL குறியீடு சுயக் கண்காணிப்புப் பெண்களின் கடன் பெறுதல் பங்கானது 49% ஆகவும் இருந்தன.
இதில் தமிழ்நாடு மாநிலத்தின் பங்கு மட்டும் 11% ஆக இருந்தது.