TNPSC Thervupettagam

கடற் வழிப்பயண வரைபடங்கள்-இந்தியா மற்றும் இலங்கை

December 22 , 2017 2401 days 795 0
  • இந்தியக் கடற்படை இலங்கை கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பெருங்கடலியல் கணக்காய்வின் (joint oceanographic survey) இரண்டாவது கட்டத்தை இலங்கையின் தென்மேற்கு கடற்பகுதியில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
  • சமீபத்திய நீரியல் அமைவு வரைபட (Hhydrographic data) தரவுகளைக் கொண்டு இலங்கையின் தென் கடற்பகுதிகளில் கடற் வழிப்பயண வரைபடங்களை (Nnavigational charts) மேம்படுத்துவதே இக்கூட்டுப் பெருங்கடலியல் கணக்காய்வின் நோக்கமாகும்.
கூட்டு பெருங்கடலியல் கணக்காய்வு 
  • 2017ஆம் ஆண்டின் மார்ச் 30 முதல் மே  11 வரை பெருங்கடலியல் கணக்காய்வின் முதற்கட்டம் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்டது.
  • உள்நாட்டுத் தொழிற்நுட்பத்தோடு வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட ஐ.என்.எஸ் தர்ஷாக் கடற்படை கப்பல் மூலம் பெருங்கடலியல் கணக்காய்வின் முதற் கட்டம் மேற்கொள்ளப்பட்டது.
  • பெருங்கடலியல் கணக்காய்வின் மூன்றாம் கட்டம் 2018–ல் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்