2019-ஆம் ஆண்டின் ஜனவரி 13-ஆம் தேதி ஒடிசாவின் பூரி கடற்கரை தனது முதல் கடல் ஆமைத் திருவிழாவைக் கண்டுகளித்தது.
உலகின் ஆலிவ் ரெட்லி ஆமைகளின் எண்ணிக்கையில் பாதியையும், இந்தியாவின் கடல் ஆமைகளின் எண்ணிக்கையில் 90 சதவீதத்தையும் ஒடிசா கொண்டிருக்கின்றது.
பின்னணி
இந்திய நீர்நிலைகளில் 5 வகையான கடல் ஆமை இனங்கள் உள்ளன. அவையாவன : லெதர்பேக் (பாதிப்பிற்குள்ளானது), லாகர்ஹெட் (அருகி வரும் நிலை), ஹாக்ஸ்பில் (தீவிரமாக அருகி வரும் நிலை), கிரீன் (அருகி வரும் நிலை) மற்றும் ஆலிவ் ரெட்லி.
இந்தியாவில் கடல் ஆமைகள் 1972-ஆம் ஆண்டின் இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி பாதுகாக்கப்படுகின்றன.
இவை IUCN (International Union for Conservation of Nature) அமைப்பின் சிவப்புப் பட்டியலின்படி பாதிப்பிற்குள்ளானதாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த ஆமைகள் மற்றும் அவற்றின் பாகங்கள் மீதான சர்வதேச வர்த்தகம் CITES (Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) என்ற அமைப்பின் பட்டியல்-I என்பதின் கீழ் தடை செய்யப்பட்டிருக்கின்றது.