சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து வடக்கு அரேபியக் கடல் பகுதியில் ஒன்பது நாட்கள் நடைபெறும் ஒரு கடற்படைப் பயிற்சியை நடத்தி வருகின்றன.
இந்தக் கடற்படைப் பயிற்சிக்கு "கடல் பாதுகாவலர்கள்" (Sea Guardians) என்று பெயரிடப் பட்டுள்ளது.
இது சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அனைத்து வித வானிலை சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் வகையில் உத்திசார் கூட்டாண்மைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.