TNPSC Thervupettagam

கடல்நீரைக் குடிநீராக்கும் 3-வது ஆலை

June 29 , 2019 1848 days 731 0
  • தமிழக அரசு ஜெர்மனி நிறுவனத்துடன் இணைந்து ஒரு நாளைக்கு 150 மில்லியன் லிட்டர் நீரை (MLD - million litre per day) சுத்திகரிக்கும் திறன் கொண்ட 3-வது கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலையைக் கட்டத் திட்டமிட்டுள்ளது.
  • இது காஞ்சிபுரம் மாவட்டத்தின் கிழக்குக் கடற்கரை சாலையின் நெம்மேலியில் தற்பொழுதுள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைக்கு அருகில் கட்டப்படவிருக்கின்றது.
  • இதற்காக பகுதியளவு மானியமானது நகரப் புத்தாக்கம் மற்றும் உருமாற்றுதலுக்கான அடல் திட்டத்தின் (AMRUT - Atal Mission for Urban Rejuvenation and Transformation) கீழ் பெறப்படவிருக்கின்றது.
  • ஏற்கனவே மீஞ்சூர் மற்றும் நெம்மேலியில் 100 MLD திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் இரண்டு ஆலைகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்