TNPSC Thervupettagam

கடவுச்சீட்டு சேவா கேந்திரா - காரைக்கால்

January 22 , 2018 2370 days 771 0
  • புதுச்சேரிக்கான முதல் அஞ்சல் அலுவலக கடவுச்சீட்டு சேவா கேந்திரா மையத்தை   (Post Office Passport Seva Kendra -POPSK) காரைக்காலில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தொடங்கி வைத்துள்ளார்..
  • பெருமளவில் கடவுச்சீட்டு தொடர்புடைய சேவைகளை வழங்குவதற்காக மத்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகமானது அஞ்சல் துறையோடு இணைந்து   நாடு முழுவதும் உள்ள தலைமை அஞ்சல் நிலையங்களில் அஞ்சல் அலுவலக கடவுச்சீட்டு சேவா கேந்திரா மையத்தை அமைத்து வருகின்றது.
  • 2017 ஜனவரியில் இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் இத்தகு மையங்களுள் காரைக்காலில் அமைக்கப்பட்டுள்ள இது 60 வது POPSK மையமாகும்.
  • இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில்  செயல்பாட்டிற்கு வந்துள்ள  முதல் POPSK மையமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்