இந்தியா மற்றும் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட ஒரு குழுவானது, கட்சின் வெப்ப மண்டல வறண்ட பாலைவனமானது ஒரு காலத்தில் பல்வேறு வகையான பறவை இனங்கள், நன்னீர் மீன்கள், ஒட்டகச் சிவிங்கிகள் மற்றும் காண்டாமிருகங்கள் ஆகியவற்றுடன் ஈரப்பதமான ஒரு துணை வெப்ப மண்டலக் காடாக இருந்துள்ளதாகக் கண்டறிந்துள்ளது.
மியோசீன் எனப்படும் புவியியல் கால கட்டத்தில் ஏறக்குறைய 14 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த முதுகெலும்பு புதைவடிவங்களை கண்டுபிடித்ததன் அடிப்படையில் அவற்றின் முடிவுகள் அமைந்துள்ளன.
இந்தப் புதைவடிவங்கள் பாலகாவா என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஏறக்குறைய 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிற்கும் இந்தியத் துணைக் கண்டத்திற்கும் இடையில் பாலூட்டிகள் எவ்வாறு பரவின என்பதற்கான ஆதாரங்களை இந்தக் கண்டுபிடிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன.