பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி நிபுணர்கள் உள்ளூர்ப் பருவநிலை சூழல்களைப் பயன்படுத்தி கண்ணாடி விரியன் பாம்புகளின் விஷம் குறித்தப் பண்புகளை நன்கு கணிக்க உதவுகின்ற "விஷம் குறித்த தகவல் வரைபடங்களை" உருவாக்கியுள்ளனர்.
இக்கண்ணாடி விரியன் (டபோயா ரஸ்ஸெலி) இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் காணப் படுகிறது.
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் பதிவாகும் 40 சதவீதத்திற்கும் அதிகமான பாம்புக் கடி தொடர்பான உயிரிழப்புகளுக்கு இது காரணமாகும்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இந்தப் பாம்பு கடித்தால் வெவ்வேறு வகையான அறிகுறிகள் ஏற்படுவதால் இதன் விஷம் மிகவும் மாறுபாடு கொண்டதாக உள்ளது.
இந்தப் பாம்பு விஷத்தின் நச்சு விளைவுகள் வெவ்வேறு நொதிகளின் செறிவுகளால் ஏற்படுகின்றன என்பதோடு அவை இரை கிடைக்கும் ஒரு தன்மை மற்றும் பருவநிலை உட்பட பல காரணிகளால் தாக்கத்திற்கு உள்ளாகின்றன.
இருப்பினும், கண்ணாடி விரியன் பாம்பின் விஷத்தில் மாறுபாட்டை ஏற்படுத்தும் சில காரணிகள் குறித்து இன்னும் தெரியவில்லை.