மாண்டி இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (IIT) பயோபாலிமரை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளைப் பயன்படுத்தி மீண்டும் உபயோகிக்கக் கூடிய ஒரு இழைம சவ்வு வடிகட்டியினை உருவாக்கியுள்ளது.
இது தண்ணீருந்து கனரக உலோகங்களைப் பிரித்தெடுக்க உதவுகிறது.
இந்த சவ்வுகள் சைட்டோசான் எனப்படும் பயோபாலிமரை அதிகளவில் கொண்ட பரப்பு இழுபொருள்களை (உலோகங்களை ஈர்த்துத் தக்க வைத்துக் கொள்ளும் பொருட்கள்) கொண்டுள்ளது.
சைட்டோசான்கள் ஒரு செயற்கை பாலிமரான நைலானுடன் கலக்கப்பட்ட நண்டுகளின் ஓடுகளிலிருந்து உருவாக்கப் பட்டுள்ளன.
பொதுவாக, வழக்கமான வடிகட்டும் அமைப்புக்கான கலன்களை அமைக்கப் பயன்படும் இழைகள், அதிவேக வாயுக்களைப் பயன்படுத்தி உருகச் செய்தல் (Melt blowing)என்ற முறையில் உருவாக்கப் படுகின்றன.
ஆனால் மாண்டி IIT கல்வி நிறுவனமானது “Solution blowing” எனும் முறையினைப் பயன்படுத்தியுள்ளது.
இம்முறையில் மேற்பரப்பினைப் பெருமளவில் அதிகப்படுத்தும் நானோ மீட்டர் அளவே விட்டமுடைய இழைகள் உருவாக்கப் படுகின்றன.
அவை அதன் மேற்பரப்பினை அதிகரிக்கச் செய்து கனரக உலோகங்களை தரமான முறையில் பிரித்தெடுக்க உதவுகிறது.