கன்யாஸ்ரீ திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் கன்யாஸ்ரீ பல்கலைக் கழகம் மற்றும் கன்யாஸ்ரீ கல்லூரிகளை அமைக்க மேற்கு வங்க அரசு முயற்சி எடுத்துள்ளது.
அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த ஜனவரி மாதத்தில் நாடியா மாவட்டத்தில் கிருஷ்ணா நகரில் ஒரு புதிய பல்கலைக் கழகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
கன்யாஸ்ரீ பல்கலைக் கழகமானது பெண்களுக்கு மட்டுமே உரிய ஒரு பல்கலைக் கழகமாக இருக்கும்.
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பெண்கள் படிப்பதை உறுதி செய்வதும் 18 வயது வரை தங்களின் (பெண்களின்) திருமணங்களைத் தாமதப் படுத்துவதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
இதுபற்றி
மேற்கு வங்க மாநில அரசு 2013 ஆம் ஆண்டில் கன்யாஸ்ரீ திட்டத்தை ஆரம்பித்தது.
இந்தத் திட்டம் 2017 ஆம் ஆண்டில் பொதுச் சேவைக்காக ஐ.நா விருதை வென்றுள்ளது.