நேபாளத்தினைச் சேர்ந்த கமி ரீட்டா ஷெர்பா என்பவர் உலகின் மிக உயரமான மலைச்சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் 26வது முறையாக ஏறி ஒரு புதிய உலகச் சாதனையைப் படைத்துள்ளார்.
இவர் தனது முந்தைய உலகச் சாதனையை முறியடித்துள்ளார்.
1994 ஆம் ஆண்டில் இவர் முதன்முதலாக இந்தச் சிகரத்தில் ஏறினார்.
இவர் ஏறக்குறைய ஒவ்வோர் ஆண்டும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளார்.