TNPSC Thervupettagam
July 20 , 2023 366 days 234 0
  • ஆந்திரப் பிரதேச மாநில அரசானது, சுமார் 10 மில்லியன் கம்பூசியா மீன்களை அந்த மாநிலத்திலுள்ள நீர்நிலைகளில் விடுவித்துள்ளது.
  • இந்த நடவடிக்கையானது கொசுக்களால் பரவும் மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்களை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த மீன் வகையானது கொசு மீன் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது பெரும்பாலும் கொசு லார்வாக்களைக் கட்டுப்படுத்தும் ஒரு உயிரியல் முகவராகப் பயன்படுத்தப் படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேசத்தில் சுமார் 6,391 டெங்குப் பாதிப்புகள் மற்றும் 2,022 மலேரியா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
  • கடந்த ஆறு மாதங்களில் அந்த மாநிலத்தில் 2,339 டெங்குப் பாதிப்புகள் மற்றும் 1,630 மலேரியா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
  • இருப்பினும், இந்த வேற்றுப் பகுதியைச் சேர்ந்த பூர்வீகம் சாராத மீன் இனங்களை இந்த நீர்நிலைகளில் விடுவதால், இது பூர்வீக இனங்கள் எதிர் கொள்ளக் கூடிய தீங்குகள் பற்றிய அச்சத்தினை எழுப்பியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்