TNPSC Thervupettagam

கருணைக்கொலை சட்டப் பூர்வமாக்கம்

May 17 , 2023 431 days 235 0
  • போர்ச்சுகல் நாடானது, கொடிய மற்றும் குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு கருணைக் கொலை அனுமதியளிப்பதைச் சட்டப் பூர்வமாக்கும் ஒரு சட்டத்தினை இயற்றியுள்ளது.
  • 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், அவர்கள் தீவிர நோய் வாய்ப்பட்டு, தாங்க முடியாத துயரத்தில் இருந்தால், அவர்கள் இறப்பதற்கு உதவி கோர அனுமதிக்கப் படுவார்கள்.
  • அத்தகைய முடிவை எடுப்பதற்கு அவர்கள் மனதளவில் தகுதியற்றவர்கள் என்று கருதப் படாவிட்டால், "நீடித்த" மற்றும் "தாங்க முடியாத" வலியினால் பாதிக்கப் படுபவர்களுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும்.
  • இந்தச் சட்டமானது அந்த நாட்டின் குடிமகன்கள் மற்றும் அந்த நாட்டின் சட்டப்பூர்வக் குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதோடு தற்கொலை செய்து கொள்வதற்காக அரசு அனுமதியினைப் பெற அந்த நாட்டிற்கு வருகை தரும் வெளி நாட்டினருக்குப் பொருந்தாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்