2023-24 ஆம் விநியோக ஆண்டில் எத்தனால் உற்பத்திக்காக ‘கரும்புச்சாறு மற்றும் சர்க்கரை பாகு’வைப் பயன்படுத்த மத்திய அரசு தடை செய்துள்ளது.
உள்நாட்டு நுகர்வுக்குப் போதுமான சர்க்கரை இருப்பைப் பேணுவதற்கும், சர்க்கரை விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இருப்பினும் 2023-24 ஆம் ஆண்டில் எத்தனால் உற்பத்திக்காக கரும்பு உபப் பொருளான 'B வகை சர்க்கரை கழிவுப் பாகினை’ பயன்படுத்த அரசாங்கம் அனுமதித்துள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கச் செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக எத்தனால் என்ற நிறமற்றத் திரவம், எரிபொருளுடன் கலக்கப் படுகிறது.