மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகமானது கர்நாடக கடல்சார் மண்டல மேலாண்மை ஆணையத்தினை அமைப்பது குறித்த ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பானது வெளியிடப் பட்டுள்ளது.
இந்த ஆணையமானது 15 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமைப்பாகும்.
கடலோரச் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்காகவும் வேண்டி இந்த ஆணையமானது அமைக்கப்பட உள்ளது.
கர்நாடகாவின் கடலோரக் கட்டுப்பாட்டு மண்டலத்தின் சுற்றுச்சூழல் மாசுபாட்டினை தடுத்தல், குறைத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவையே இதன் முதன்மைப் பணிகள் ஆகும்.
இந்த ஆணையத்தின் உறுப்பினர்களுடைய பதவிக் காலம் மூன்று ஆண்டுகளாகும்.