காங்கிரஸ் அரசானது, தேர்தலுக்கு முந்தைய ஐந்து வாக்குறுதிகளில் ஒன்றாக அன்ன பாக்யா திட்டத்தினை அறிவித்தது.
இதன்படி, மத்திய அரசு தற்போது வழங்கி வரும் ஐந்து கிலோ அரிசியுடன் கூடுதலாக, வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பத்தினர் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு ஒரு நபருக்கு ஐந்து கிலோ அரிசியானது வழங்கப்படும்.
இதற்காக மாதத்திற்கு சுமார் 2.29 லட்சம் மெட்ரிக் டன்கள் அரிசி கூடுதலாக தேவைப் படுகிறது.
முதலில் இந்த அளவு அரிசியினை வழங்க ஒப்புக் கொண்ட இந்திய உணவுக் கழகம் (FCI) ஆனது பின்னர் அதன் முடிவை ரத்து செய்தது.