கர்நாடகாவின் சமூக நலத்துறையானது கிராமப்புறங்கள் மற்றும் சமூகத்தில் தாக்கங்களை ஏற்படுத்தும் தொழில்நுட்பங்களில் பணிபுரியும் தொழில்முனைவோர்களை மேம்படுத்துவதற்காக உன்னதி திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
உன்னதி திட்டத்தின் முதல் பிரிவு தொழில்நுட்ப புத்தாக்கமாகும்.
இந்த பிரிவானது SC/ST சமூகத்தைச் சார்ந்த வாய்ப்புகள் மறுக்கப்பட்ட தொழில்முனைவோரை அடையாளம் காண்பது மற்றும் அவர்களை ஊக்குவிப்பதாகும்.
உன்னதி திட்டத்தின் இரண்டாம் பிரிவு சமூக தாக்கமாகும்.
இந்த பிரிவானது அரசாங்கமும் சமுதாயமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பான தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளுக்காக பணிபுரியும் நிறுவனங்களைக் கண்டறிவதாகும்.