பாஜக கட்சிக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து கடந்த 29 ஆம் தேதியன்று பி.எஸ் எடியூரப்பா 4-வது முறையாக கர்நாடகாவின் முதல்வராக பதவியேற்றார்.
இவர் ஜூலை 29 அன்று சட்ட மன்றத்தில் நம்பிக்கை தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.
நான்காவது முறையாக கர்நாடகாவின் முதல்வராக பதவியேற்கும் இவர் தற்போதைய சட்டமன்றத்தில் பதவியேற்பது இரண்டாவது முறையாகும்.
கர்நாடகாவில் நான்கு முறை முதல்வராக பதவியேற்ற ஒரே முதல்வர் இவரேயாவார்.
முன்னதாக சட்டமன்றத் தேர்தலில் 104 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்ததையடுத்து 2018 ஆம் ஆண்டு மே மாதம் முதல்வராக பதவியேற்றார்.
ஆனால் சட்டப்பேரவையின் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இரண்டே நாட்களில் அவர் பதவி விலகினார்.
இதனால் இவர் 2 ½ நாட்கள் மட்டுமே பதவியிலிருந்த இந்தியாவின் மிகக் குறுகியக் கால முதல்வர்களில் ஒ