தில்லி அரசின் கலந்துரையாடல் மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (DDC - Dialogue and Development Commission) 17 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு உயர் நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இது தில்லி நகரில் “உயர் கல்வியில் சீர்திருத்தம் மேற்கொள்வதை” நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தக் குழுவானது ஒரு ஆண்டிற்குள் தில்லி நகரில் உயர் கல்வி அமைப்பில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்காக இலக்குகள், அளவீடுகள், கொள்கைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பரிந்துரைக்கும்.
இந்தியாவின் உயர் கல்வி அமைப்பை உலகத் தர அளவில் மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் லாப நோக்கில்லா கொள்கை நிறுவனமான நாளந்தா 2.0 DDC-ன் இந்த முன்னெடுப்புக்கு அறிவுப் பங்காளராக செயல்படும்.