2021-2022 ஆம் ஆண்டில் 10 ஆம் வகுப்பில் சேர்ந்த சுமார் 35 லட்சம் மாணவர்கள் 11 ஆம் வகுப்பில் சேரவில்லை.
இந்த 35 லட்சம் மாணவர்களில் 27.5 லட்சம் பேர் பொதுத் தேர்வில் தோல்வியடைந்துள்ள நிலையில், மேலும் 7.5 லட்சம் மாணவர்கள் 10 ஆம் வகுப்புத் தேர்வினை எழுதவில்லை.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் இந்தியச் சான்றிதழ் கல்விச் சபை ஆகியவற்றில் பயிலும் மாணவர்களின் தோல்வி விகிதம் 5% வரை குறைவாக உள்ளது.
ஆனால் மாநிலக் கல்வி வாரியங்களில் இது 16% என்ற அளவில் அதிகமாக இருந்தது.
தவறிய 35 லட்சம் மாணவர்களில் 4.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேசியத் திறந்த நிலைக் கல்வி நிறுவனம் மூலம் தேர்வு எழுதுகின்றனர்.
மேலும், தேசியத் திறந்தநிலைக் கல்வி நிறுவனத்தில் பதிவான தோல்வி விகிதமும் 47% முதல் 55% வரையிலான வீதத்தில் உள்ளது.
85% அதாவது கிட்டத்தட்ட 30 லட்சம் மாணவர்களின் இடைநிற்றல் 11 மாநிலங்களில் மட்டுமே பதிவாகியுள்ளன.
அவை உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, ராஜஸ்தான், கர்நாடகா, அசாம், மேற்கு வங்காளம், ஹரியானா மற்றும் சத்தீஸ்கர் ஆகியனவாகும்.
மேகாலயாவில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சதவீதம் 57% என்ற அளவில் குறைவாக உள்ளது.
தேர்ச்சி விகிதமானது மத்தியப் பிரதேசத்தில் 61 சதவீதமாகவும், ஜம்மு காஷ்மீரில் 62% ஆகவும் உள்ளது.
இது பஞ்சாப் மாநிலத்தில் 97.8% ஆகவும், கேரளாவில் 99.85% ஆகவும் உள்ளது.