மத்திய அரசானது, இந்தியாவின் இளையோர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 'கல்வி முதல் தொழில் முனைவு வரை' என்ற ஒரு கூட்டாண்மையைத் தொடங்க உள்ளது.
இது நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள பகுதிகளில் உள்ளவரும் எண்ணிம திறன்களை அணுகக் கூடிய வகையில், அதனை அனைவருக்குமானதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மெட்டா நிறுவனமானது, அடுத்த மூன்று ஆண்டுகளில் 5 லட்சம் தொழில் முனைவோருக்கு எண்ணிம சந்தைப் படுத்துதல் திறன் பயிற்சியை வழங்க உள்ளது.
இந்தப் பயிற்சியானது, வளர்ந்து வரும் மற்றும் தற்போதுள்ள தொழில்முனைவோர் ஆகிய இரு பிரிவினருக்கும் பயனளிக்கும் வகையில் ஏழு பிராந்திய மொழிகளில் வழங்கப் பட உள்ளது.