TNPSC Thervupettagam
April 18 , 2025 5 days 64 0
  • கவாச் 5.0 எனப்படுகின்ற ஒரு மேம்படுத்தப்பட்ட தானியங்கி இரயில் பாதுகாப்பு அமைப்பினை அறிமுகப் படுத்துவதற்கான திட்டங்களை மத்திய இரயில்வேத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • இந்த கவாச் 5.0 அமைப்பானது ரயில்களுக்கு இடையேயான பயணத் தொலைவினை மிக கணிசமாகக் குறைத்து, ரயில்களைப் பாதுகாப்பாகவும் திறமையாகவும் இயக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • கவாச் என்பது இந்தியாவின் உள்நாட்டு தானியங்கி இரயில் பாதுகாப்பு (ATP) அமைப்பு ஆகும்.
  • இதில் இரயில் என்ஜின் ஓட்டுநர் செயல்படத் தவறினால் வேகக் கட்டுப்பாட்டு நிறுத்த அமைப்பினைத் தானாகவே செயல்படுத்துவதன் மூலம் இரயில் மோதல்களை உடனே தடுப்பதற்காக இது உருவாக்கப்பட்டது.
  • சுமார் 65,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்திலான உலகின் நான்காவது பெரிய இரயில் வலையமைப்பை இந்தியா இயக்கி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்