தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் கவிதா மலோத் என்பவர் ஹைதராபாத்தின் ஒரு சிறப்பு நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப் பட்டுள்ளார்.
இவர் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
தெலுங்கானாவின் மஹபூபாபாத் என்ற தொகுதியைச் சேர்ந்த இவர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மீதான வழக்குகளின் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டார்.