ஆலீவ் ரிட்லி ஆமைகள் ஒடிசாவின் கேந்திரபரா மாவட்டத்தில் உள்ள கஹிர்மாதா கடற்கரையில் இருக்கும் தங்கள் அடைகாக்கும் தளத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளன.
இந்த இடமானது முட்டை இடுவதற்காக இந்த உயிரினங்களின் உலகின் மிகப்பெரிய முட்டையிடும் இடமாகக் கருதப்படுகின்றது.
இந்தக் கூறானது “அரிபடா” (ஸ்பெயின் மொழி) என்று அழைக்கப்படுகின்றது.
“அரிபடா” ஆனது முட்டைகள் இடுவதற்காக அடைகாக்கும் தளத்திற்கு ஒன்றாக வரும் மில்லியன் கணக்கிலான இந்தக் கடல்சார் இனங்களின் தனித்துவ இயற்கைப் பாரம்பரியத் தளம் என்பதைக் குறிப்பிடுகின்றது.
ஆலீவ் ரிட்லி ஆமைகள் பொதுவாக 120 முதல் 150 முட்டைகளை இடும். இந்த முட்டைகளிலிருந்து 45 முதல் 50 நாட்களில் குஞ்சுகள் வெளிவரும்.