ருவாண்டா நாட்டுப் படைப்பிரிவுகளின் ஆதரவுடன் M23 கிளர்ச்சியாளர்கள் காங்கோ ஜனநாயகக் குடியரசின் கோமா நகரத்திற்குள் நுழைந்து அந்நகரத்தைக் கைப்பற்றி உள்ளனர்.
சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பிராந்திய மையமான கோமா, ருவாண்டாவுடனான காங்கோவின் எல்லையில் அமைந்துள்ளது.
இந்த மோதல் ஆனது 1994 ஆம் ஆண்டு ருவாண்டா இனப்படுகொலைக்குப் பிறகு காங்கோவில் நடைபெற்ற பல உள்நாட்டுப் போர்களின் தொடர்ச்சியாகும்.
இந்த நிகழ்வின் போது, மிக முக்கியமாக டுட்சி இனக்குழுவைச் சேர்ந்த 1 மில்லியன் மக்கள் ஹுட்டு தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
தற்போதைய ருவாண்டா நாட்டு அதிபர் பால் ககாமே தலைமையிலான டுட்சி இனக் கிளர்ச்சியாளர்கள் அப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் என்பதோடு மேலும் பல ஹுட்டு குற்றவாளிகள் எல்லையைத் தாண்டி காங்கோவிற்குள் தப்பி ஓடினர்.
காங்கோ நாட்டின் டுட்சி பிரிவினர் தலைமையிலான கிளர்ச்சிக் குழுவானது, 2012 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது என்பதோடு இது முந்தைய டுட்சிகள் தலைமையிலான கிளர்ச்சிகளின் வாரிசு அமைப்பாகும்.