காங்கோ வடிநிலக் காடுகள் - காடுகளின் நிலை குறித்த அறிக்கை 2021
September 23 , 2022 667 days 375 0
இந்த அறிக்கையானது மத்திய ஆப்பிரிக்க வன ஆணையத்தால் சமீபத்தில் வெளியிடப் பட்டது.
மத்திய காங்கோ நதிப்படுகையில் உள்ள மட்கரி நிலங்களைப் பாதுகாப்பதற்கு அதிக முதலீடு மற்றும் ஆராய்ச்சி தேவை என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
ஹைட்ரோகார்பன் ஆய்வு, நீர் உட்புகுதல், பாமாயில் தோட்டம், நீர்மின் ஆற்றல் நிலைய அணைகள் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் இந்தப் பகுதி தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
ஒரு மட்கரியில் சுமார் 30 ஜிகா டன் அளவு கார்பனைச் சேமித்து வைக்கும் திறன் இருப்பதால், இந்த மட்கரி நிலங்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகும்.
இது முழு காங்கோ வடிநிலக் காடுகளிலும் உள்ள மரங்களின் நிலத்தடி உயிரிப் பொருளுக்குச் சமம்.
இவை சுமார் 20 ஆண்டுகள் அமெரிக்கா வெளியிடும் புதைபடிவ எரிபொருள் உமிழ்வுகளுக்கு இணையான கார்பனைச் சேமிக்கும் திறன் கொண்டவையாகும்.