TNPSC Thervupettagam

காசி தமிழ்ச் சங்கமம் (KTS)

November 24 , 2022 606 days 429 0
  • வாரணாசியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியைப் பிரதமர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • இது மத்திய கல்வி அமைச்சகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மாத கால நிகழ்வு ஆகும்.
  • உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசி நகரம் (வாரணாசி) மற்றும் தமிழ்நாடு ஆகியவை இடையே உள்ள வரலாற்றுத் தொடர்புகளை மீண்டும் அடையாளம் காண்பதற்கான ஒரு நிகழ்வு இதுவாகும்.
  • ‘திருக்குறள்’ நூல் மற்றும் 13 மொழிகளில் மேற்கொள்ளப்பட்ட அதன் மொழிபெயர்ப்பு நூல்களையும் அவர் வெளியிட்டார்.
  • காசியின் மேம்பாட்டிற்குத் தமிழகத்தின் பங்களிப்பை மேற்கோளிட்டுக் காட்டிய பிரதமர், தமிழ்நாட்டில் பிறந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றியது குறித்தும் நினைவு கூர்ந்தார்.
  • காசியில் பல ஆண்டுகள் வாழ்ந்த மாபெரும் கவிஞரும் புரட்சியாளருமான சுப்பிரமணிய பாரதியையும் பிரதமர் அவர்கள் குறிப்பிட்டு உரையாற்றினார்.
  • பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதி அவர்களுக்காக அர்ப்பணிக்கப் பட்ட ஓர் இருக்கையையும் அவர் அறிவித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்