TNPSC Thervupettagam

காசியாபாத் நகர் நிகாம் – மும்பை பங்கு வர்த்தகம்

April 6 , 2021 1203 days 594 0
  • காசியாபாத் நகர் நிகாமானது BSE பங்குச் சந்தையில் தன்னைப் பதிவு செய்து கொண்டு உள்ளது
  • மும்பை பங்கு வர்த்தகத்தின் (Bombay Stock Exchange – BSE) பத்திரத்தைப் பயன்படுத்தி தனியார் பங்குகளின் அடிப்படையில் நகராட்சிப் பத்திரங்களை வழங்கி ரூ.150 கோடி வரை காசியாபாத் நகர் நிகாம் நிதி திரட்டியுள்ளது.
  • நாட்டில் நகராட்சிக் கழகத்தால் வழங்கப்பட்ட முதல் பசுமைப் பத்திரம் இதுவாகும்.
  • இந்தத் தொகையானது காசியாபாத்திலுள்ள இந்திரபுரத்தில் மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப் பயன்படுத்தப்படும்.
  • ரூ.240 கோடி மதிப்பிலான இத்திட்டத்திற்கு நிதியளிக்க இத்தொகை பயன்படுத்தப் படும்.
  • இந்தச் சுத்திகரிப்பு நிலையங்கள், சுத்திகரிக்கப்பட்ட நீரைத் தொழிற்சாலைகளில் மீண்டும் உபயோகிக்க வழிவகை செய்யும்.
  • உத்தரப் பிரதேச மாநிலத்தில், நிதி திரட்டிய இரண்டாவது நகராட்சிக் கழகம் காசியாபாத் நகர் நிகாமாகும்.
  • இதற்கு முன்பு லக்னோ நகராட்சி கழகமானது BSE பங்குச் சந்தையில் தன்னைப் பதிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்