கடந்த இருபது ஆண்டுகளில் காட்டுத் தீயின் தீவிரம், அடிக்கடி காட்டுத் தீ ஏற்படும் தன்மை மற்றும் காட்டுத் தீ ஏற்படும் மாதங்களின் எண்ணிக்கை ஆகியவை அதிகரித்துள்ளதாக ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது.
இது ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் வளச் சபையினால் வெளியிடப்பட்டது.
இந்த ஆய்விற்கு ‘மாறி வரும் பருவநிலையில் காட்டுத் தீ நிகழ்வுகளை மேலாண்மை செய்தல்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
கடந்த இருபது ஆண்டுகளில் காட்டுத் தீ ஏற்படும் நிகழ்வுகள் பத்து மடங்கு அதிகரித்து உள்ளதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
இந்தியாவில் உள்ள 62 சதவீதத்திற்கும் அதிகமான மாநிலங்கள் அதிதீவிரமான காட்டுத் தீயால் பாதிக்கப்படக் கூடியவை என்றும் இந்த ஆய்வில் கண்டறியப் பட்டு உள்ளது.
மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய சில மாநிலங்களில் குறிப்பிடத் தக்க அளவில் காட்டுத் தீ பதிவாகியுள்ளது.